Monday, February 26, 2024

என்ன கோவமோ
தெரியவில்லை,
இன்று 
உயரத்தில் 
பூத்திருக்கிறது
பூ. 

Tuesday, January 30, 2024

என்னுடைய 
அனைத்து 
துன்பத்திலும், 
அந்த தருணத்திற்கு 
தகுந்த 
பின்னணி 
இசையையும் 
நானே 
வாசிக்கிறேன்.

Tuesday, January 23, 2024

நதி போல் 
கரைகளை 
யாராலும் 
கொஞ்ச 
முடியாது.
நூலகம் என்பதை 
மறந்து  
சத்தமாக 
பேசினீர்கள் 
என்றாலும் 
பரவாயில்லை..
'சாரி' 
என்று 
சத்தமாக
கேட்காதீர்கள்.

Saturday, January 06, 2024

தள்ளிப் போனது 
தனிமை.
நிலவின் 
வருகை.

Wednesday, December 20, 2023

எல்லாம் 
ஒரு நாள் மாறும்  
என்ற 
நம்பிக்கை படி 
அந்த 
ஒரு நாளுக்கு 
காத்திருக்கிறேன்;
சொல்ல மறந்துவிட்டேன்,
இறந்து போன 
என் தாத்தாவும்
அப்படி ஒரு நாளுக்கு 
காத்திருந்தார்.
காயப்படுத்தாத 
மென்மையான 
வார்த்தைகளைத்தான் 
கவிதைகளில் 
பயன்படுத்துகிறேன்;
என்னசெய்வது,
கடைசியில் 
திருப்பிவைத்த 
கத்தி போல 
நிற்கிறது 
ஆச்சர்யக்குறி!

Tuesday, December 19, 2023

நல்ல கவிஞர்,
பைத்தியமாகி விட்டார் 
என்றார்கள்;
அப்படி ஒன்றும் 
பெரிய 
வித்தியாசம் இல்லை.
அண்ணலும் நோக்கினான், 
அவளும் நோக்கினாள்,
அவரவர்கள் மொபைலை;
அங்கு  பிறந்திருக்கவேண்டிய 
ஒரு காதல் 
வேறு இடம் தேடி 
சென்றது.

Monday, December 18, 2023

இந்த கடற்கரை 
அலை 
என் காலை 
தழுவும் 
போதெல்லாம் 
நான் 
தாயாகிறேன்.
அது 
திருமணகோலத்தில் 
அமர்ந்திருக்கும் 
என் மகள்
ஆகிறது.

Wednesday, November 22, 2023

சிரிப்பும் 
ஒரு வகையான 
எதிரொலி.
ஹா ஹா ஹா..!
வழி 
மாறிய 
பயணமும், 
ஒரு 
பயணம்.

Tuesday, October 10, 2023

சொல்வதற்கு 
ஒன்றும் இல்லை;
இருந்தாலும் 
ஒன்று சொல்கிறேன்.
ஒன்றும் 
சொல்வதற்கு 
இல்லை.

Tuesday, September 26, 2023

அமைதியை 
எழுப்பிவிட்டு, 
தூங்கச்செல்கிறது 
சப்தம்.

Monday, August 14, 2023

போட்டோ எடுக்காத 
தருணங்களை 
நினைவில் 
வைத்திருக்கிறேன்.

Friday, August 11, 2023

கோவில் தூணில் 
விபூதி கொட்டுவது 
ஒரு காலத்தில் 
சடங்கானாலும் 
ஆச்சர்யப்படயில்லை. 
அசையாத 
ஊஞ்சலுக்கு 
காற்றின் மீது 
கோவம்.

Tuesday, July 25, 2023

புரிந்த கவிதைக்கு
ஒரே அர்த்தம்;
புரியாத கவிதைக்கு
பல அர்த்தம்.

Tuesday, July 04, 2023

நதியில் 
ஆடிவிட்டு, 
கிணற்றில் 
தூங்குகிறது 
நிலவு.
கோவில் வாசலில் 
யார் தலையில் 
இருந்தோ 
உதிர்த்து கிடைக்கிறது 
ஒரு பூ.
அதை 
எல்லோர் தலையிலும் 
பொருத்திப்  
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நல்ல 
கவிதைக்கு முன்பாக  
பல சுமாரான 
கவிதைகள் எழுதப்படும் 
என்பது ஐதீகம்.
நாம் படிப்பது 
அனைத்தும் 
நல்ல கவிதைகள் 
என்றே நினைப்போம்.

Thursday, June 01, 2023

பேசாத 
மலை.
பேசும் 
மழை. 
நிலா 
இப்போதுதான் 
வந்தது,
விடியற்மாலை.

Sunday, May 07, 2023

யாரையும்  
வெறுக்காதீர்கள்;
ஒருவேளை 
சொர்க்கத்திலோ 
அல்லது 
நரகத்திலோ 
மீண்டும் 
பார்க்க நேர்தால்...!

Wednesday, May 03, 2023

ஆலமர 
கருமேகம்;
மழை 
விழுது.
பாசமான 
கவிதைகளில் 
அமர்ந்திருக்கின்றன,
வயதான 
வார்த்தைகள்.
நதியின் 
தியான நிலை, 
குளம்.

Wednesday, April 12, 2023

தொட்டால் 
தீட்டு 
என்றார்கள்;
முத்தம் 
தந்துவிட்டேன்.

Tuesday, March 28, 2023

இரவில் 
பெய்யும் 
மழைக்கு 
நான் 
வைத்திருக்கும் 
பெயர் 
'இரழை'

Saturday, March 25, 2023

நேராக 
கடலில் 
பெய்கிறது;
சோம்பேறி 
மழை.
ஒரு 
பழைய 
சப்தத்தை 
நினைவுபடுத்தும்
ஒரு 
பழைய கோவில்  
மணியோசை.
கூழாங்கல் 
மலையில் தெரியும் 
பாறையை  
நதிக்கு 
அறிமுகம் செய்து 
வைத்தது;
அவரும் நம்ம 
பங்காளி 
வகையிரா தான்.
நான் 
வாங்குவதில்லை,
சத்தமாக 
விற்பவரிடம்
'பூ'

Wednesday, March 22, 2023

மிகப் பெரிய
சுடுகாடு
இந்த
பூமி.

Tuesday, March 22, 2022

எலி பந்தயத்தில் 
இருந்து 
வெளிவர 
வழி சொல்கிறார்கள்;
எலி கூட்டத்தில் 
இருந்து 
எப்படி வெளிவருவது.

Friday, March 18, 2022

ஏரியில் 
இருந்த 
படகை 
குடத்தில் 
ஏற்றிக்கொண்டு 
போனாள்.
'பிறை நிலா'

Saturday, March 12, 2022

நான் அதிகம் 
ஒன்றும் 
கேட்கவில்லை;
பூவின் நிழலை 
விட்டுவிட்டு 
பூவை மட்டும் 
பறித்து செல்லுங்கள்.

Thursday, March 10, 2022

தனியாக இருப்பது 
ஒரு சுகம்தான்;
எங்கள் ஊர் 
அரசமர 
பிள்ளையார் போல.

Wednesday, March 09, 2022

என் 
கருப்பு நிற காரை 
துடைக்கும் 
போதெல்லாம்,
என் தாத்தா வளர்த்த  
'நாகு' எருமை
நியாபகத்திற்கு வருகிறது.

Tuesday, March 08, 2022

எல்லோரும் 
ஒரு சொந்த 
கதை 
வைத்திருக்கிறார்கள்.
கவிதை 
வைத்திருப்பவர்களுக்காக 
காத்து இருக்கிறேன்.

Sunday, March 06, 2022

பூமி தோன்றிய 
காலத்தில் இருந்து
மனிதனை 
கண்காணிக்கும்
cctv கேமரா  
'சூரியன் & சந்திரன்'

Saturday, March 05, 2022

பல வருடம் 
கழித்து 
சொந்த ஊருக்கு 
போகிறேன்.
எல்லோரும் 
என்னிடம் கேட்டதை 
நான் 
ஊரில் ஓடும் 
ஆற்றிடம் கேட்டேன்,
'என்னங்க ...
இப்படி  இளைச்சிடீங்க'

Tuesday, February 15, 2022

செல்போன் கையில் 
இருக்கிறது;
பத்து நிமிடம் தாண்டியும் 
அதை பார்க்காமல் 
சாலையை வேடிக்கைப் 
பார்த்துக்கொண்டிருக்கிறான்;
சைக்கோ வாக இருக்குமோ 
என்று 
தள்ளி நிற்கிறேன்;

Sunday, February 06, 2022

தினமும் 
இரவு கொட்டிய 
இருளை 
ஒரு இடம் விடாமல்
துடைத்து எடுக்கிறது 
இந்த 
சூரியன்.

Friday, January 21, 2022

நதியை விட 
கூழாங்கல் 
கூறும் 
நதியின் வரலாறு 
சுவாரஸ்யம்.

Wednesday, January 19, 2022

நல்லவேளை, 
மேக்கப் போட்டு 
அழகை 
குறைத்தாள்.

Saturday, January 01, 2022

கோவில் வாசலில் 
ஒரு காடு 
நின்றுக் கொண்டிருந்தது;
யானை.

Friday, December 31, 2021

கவிதை 
எழுதிக் கொள்ளலாம்;
நாளையும் 
வரத்தானே போகிறது
நிலா.

Thursday, December 30, 2021

காரை நிறுத்த 
போகும் நேரம்,
பிடித்த 
பாட்டை போடுபவர்கள் 
எல்லா 
ரேடியோ ஸ்டேஷன்லையும்
வேலை செய்கிறார்கள்.

Wednesday, December 29, 2021

நான் பாதுகாப்பான 
இடத்தில் 
அமர்ந்திருக்கிறேன்;
பாவம்
இந்த பூமி,
அந்தரத்தில் 
தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த
மூன்று காரணங்களும்
உங்கள் வாழ்க்கையை
பாதிக்காமல் 
பார்த்துக் கொள்ளவேண்டும்;
அதற்கு 
அந்த
மூன்று காரணங்களை
முதலில் நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும்.

Tuesday, December 28, 2021

கண்ணால் 
பார்த்தால் தான் 
நம்புவேன் என்றால், 
நீங்கள் 
கடவுளை 
எப்படி 
பார்ப்பீர்கள்.

Monday, December 27, 2021

பட்டம் 
பெற்ற 
காற்று, 
இசை 
ஆகிறது.

Sunday, December 26, 2021

தண்டவாளத்தின் நடுவில் 
தேங்கிநிற்கும் தண்ணீரில் 
நிலவைப் பார்க்கிறேன்;
தற்கொலை 
செய்துகொள்ளப் போகிறதோ 
என்றெண்ணி 
சிறிய கல் எடுத்து அதனுள் 
எறிந்துவிட்டு செல்கிறேன்.

Saturday, December 25, 2021

யாரோ ஒருவருக்கு 
யாரோ போட்ட போஸ்ட்டை 
யாரோ ஒருவன் 
'லைக்' போடுகிறான்.
தூங்காதபோது 
வரும் கனவிற்கு 
நிஜம் 
என்று பெயர்.
யாருக்கும் 
உண்மை 
பிடிப்பதில்லை;
உண்மை போல  
இருப்பது 
பிடிக்கிறது;
நானும் 
கவிதை போல  
எழுதுகிறேன்.

Friday, December 24, 2021

அவள் கூந்தல் 
சுருள்முடி 
என் கையெழுத்தை 
நியாபகப்படுத்துகிறது.

Thursday, December 23, 2021

உங்களுக்கு 
தலைக்கனம் 
என்று 
யார் சொன்னாலும் 
நம்பாதீர்கள்;
உங்கள் 
தலையணை 
சொன்னால் மட்டும் 
நம்புங்கள்.

Wednesday, December 22, 2021

நானே மறந்தாலும், 
ஆண்டுதோறும் 
மறக்காமல் 
எனக்கு 
பிறந்தநாள் 
வாழ்த்து சொல்லும் 
என் 
பேஃக் ஐடி.

Tuesday, December 21, 2021

கனவில் இன்று
எல்லாம்  
சதுர வடிவம் 
ஆனது;
சதுரமான பனித்துளி;
சதுரமான நிலா;
சதுரமான பூமி;
சதுரமான மழைத்துளி;
சட்டென்று பதறி 
கண்விழித்தேன்;
நான் பார்த்தது, 
சதுர இட்லி.

Friday, December 17, 2021

இலைகளை 
இரசிக்க 
கற்றுக் கொண்டபின், 
நான் 
பூக்களுக்கு 
காத்திருப்பதில்லை.

Tuesday, December 14, 2021

ஒரு வட்டத்தில் 
அமர்ந்திருக்கும் 
பல வட்டம்போல்,
ஒரு  இருட்டுக்குள்   
பல  இருட்டுகள்    
ஒளிந்திருக்கின்றன.

Thursday, December 09, 2021

கடலிலிருந்து பிரிந்து 
ஒரு ஆறு 
மலை மேல் ஏறுகிறது;
நீர் எழுச்சி-யில் 
குளிக்க 
சென்று கொண்டிருக்கிறேன். 

Tuesday, December 07, 2021

முழுமையானது
என்ற ஒன்று 
இல்லவேயில்லை;
முற்றுப்பெறாத
ஒன்றுதான் 
முழுமையானது.
அதாவது ...
...

Monday, December 06, 2021

பல புத்தகம் 
படிக்காமல் 
இருந்தாலும், 
பிடித்த
புத்தகத்தை 
திரும்ப திரும்ப 
படிப்பது 
ஒருவகை 
புத்தகநோய்.

Sunday, December 05, 2021

இது 
உதவிக்கு 
மறுஉதவி;
ஒரு 
ஆலமர செடி 
முன் நின்று 
அதற்கு  
நிழல் 
தந்துக் கொண்டிருக்கிறேன்.

Tuesday, November 23, 2021

அறிவின் படி செயல்படுவதா
அல்லது 
உணர்வின் படி செயல்படுவதா 
என்று 
கலங்கி நிற்கும்  
போதெல்லாம்
நான் செல்வது 
'உணவின்' வழியில். 

Sunday, November 07, 2021

அளவில் சிறிய
எழுதுகோலை 
பார்த்தேன்;
'ஹைக்கூ'
எழுதுவதற்கு 
என்றார் 
கடைக்காரர்.

Friday, November 05, 2021

மழையை 
எல்லோரும் 
ரசிக்கிறோம்;
எப்படியும் 
நின்றுவிடும் 
என்கிற 
நம்பிக்கையில்.

Monday, November 01, 2021

கடலை கிழிக்கும் 
இந்த 
திமிங்கலம்;
மீண்டும் 
தைக்கும் 
தாவி தாவி குதிக்கும்
இந்த  
மீன்கள்.

Sunday, October 31, 2021

சிரிக்க தெரிந்தவரிடம் 
நட்பு கொள்ளும்போது, 
நமக்கு கிடைப்பது 
இரண்டு 
நண்பர்கள்.

Saturday, October 30, 2021

பாட்டு 
ஆரம்பிக்கும் இடம் 
ஒன்றுதான்;
ஆனால் 
முடியும் இடத்தை 
கேட்பவன் 
தீர்மானிக்கின்றான்.
காதல் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டுவதில்லை;
காமம் 
என்று சொல்லும்போது 
உதடுகள் 
ஒட்டும்.

Thursday, October 28, 2021

அவன் 
முள் செடியைத்தான் 
விற்கிறான்;
நான் 
ரோஜா செடியை 
வாங்கினேன்.

Wednesday, October 27, 2021

வார்த்தைகள் 
இல்லாதது 
'மௌனம்'
என்றால் 
எதற்கு 
அந்த 
வார்த்தை 
மட்டும்.

Monday, October 25, 2021

மூன்று நிறம் 
தெளிவாகவும் 
ஒரு நிறம் 
மங்களாகவும் 
இருக்கிறது;
வயதான 
வானவில்.

Friday, October 22, 2021

கடலை 
குளிப்பாட்டும் 
மழை.
நுரையானது 
அலை.

Monday, October 18, 2021

வண்ணத்துப்பூச்சி 
பற்றிய கவிதையில்
வர்ணம் பூசிக்கொண்டு
அமர்ந்திருக்கின்றன 
வார்த்தைகள்.

Friday, October 15, 2021

வீட்டு வாசலில் 
பூசணிக்கு பதில் 
புத்தகத்தைக் 
கட்டுங்கள்.
தலையில் நன்றாக 
"நச்" என்று 
இடிக்கட்டும்.

Monday, October 04, 2021

மழையின் 
முதல் துளி-க்கு 
கிடைக்கும் 
ஆரவாரம்,
பாவப்பட்ட 
கடைசி துளி-க்கு 
கிடைப்பதே இல்லை.

Sunday, October 03, 2021

14 நாட்கள் 
தனிமைப் படுத்தப்பட்டு 
திருப்பி வந்த 
60 வயது பெண்மணி 
சொன்னது,
"என் வாழ்க்கையில் 
இரண்டு வாரம்  
சமையலுக்கு 
விடுமுறை கொடுத்த 
கொரோனா-விற்கு 
நன்றி"
இந்த உலகில்
பழங்குடி 
சமுதாயத்தைக் 
கண்டு பிடிப்பது 
சுலபம்.
அவர்களின் கதையில் 
அல்லது 
பாடலில்,
ஏழு மலை தாண்டி ..
அல்லது 
ஏழு கடல் தாண்டி ..
என்ற ஒரு வரி 
நிச்சயம் இருக்கும்.

Friday, October 01, 2021

நான் திண்ணையில் 
அமர்ந்திருக்கிறேன்;
திண்ணையும் 
அமர்ந்திருக்கிறது.
அந்தமான் 
பழங்குடி மக்களை 
பார்க்க சென்றேன்;
அவர்கள் 
என்னை எப்படி 
பார்த்தார்கள் என்று 
தெரியாது.

Thursday, September 30, 2021

வெளிச்சமான 
இருட்டு,
பகல்.

Tuesday, September 28, 2021

நான் 
பேசாத 
வார்த்தைகள்,
நான் 
படிக்காத 
புத்தகத்தில் 
அமர்ந்திருக்கின்றன. 

Sunday, September 26, 2021

வசிக்கும் தெருவில் 
பிறப்பு, கல்யாணம், இறப்பு 
என்ற மூன்றையும் 
ஒரே நாளில் பார்க்கிறார்;
இரண்டு நிகழ்வை 
முகநூலிலும் 
திருமண நிகழ்வில் 
எடுத்த செல்பியை 
இன்ஸ்டா-விலும் 
பதிவு செய்கிறார் 
இன்றைய 
புத்தர்.
இக்கரைக்கு 
அக்கரை பச்சை 
என்கிறார்கள்.
இப்போது பச்சை 
எங்கேயும் இல்லை.
சொல்ல மறந்துவிட்டேன் 
கரையும் இல்லை.

Saturday, September 25, 2021

இந்த துக்கத்தில் 
என் காதலி 
என்னுடன் இல்லாதது 
வருத்தம்தான்.
அதை விட வருத்தம் 
எனக்கு காதலியே 
இல்லை என்பது.

Friday, September 24, 2021

எல்லா இடத்திலும் 
கேமரா;
அப்பாடா 
என்கிற 
சுதந்திர உணர்வு.

Thursday, September 23, 2021

சிற்பங்களைப் பற்றிய 
கவிதையில், 
செதுக்கப்படுவது 
வார்த்தைகள்.

Sunday, September 19, 2021

மலையின் 
இரகசியங்களை, 
மழைப் போல் 
யாரும் 
தொடுவதேயில்லை.

Friday, September 10, 2021

மரத்தின்  
மௌன விரதம்,
இலையுதிர் காலம்.

Sunday, September 05, 2021

ஒருவர் 
வீட்டு வேலை 
செய்கிறார்;
ஒருவர் 
வீட்டிலிருந்து 
வேலை 
செய்கிறார்;
அவ்வளவு 
வித்தியாசம்.
இன்று 
என்பது,
நேற்றைய நாளை 
அல்லது 
நாளைய நேற்று.

Saturday, September 04, 2021

கோவமான 
தண்ணீர்,
வெந்நீர்.

Tuesday, August 31, 2021

முதன் முதலாக 
மயிலைப் பார்த்த 
குழந்தை சொன்னது, 
'மேக்கப் கொஞ்சம் 
அதிகம்ல'
சின்ன சின்ன 
ஆசை;
நான் சுவாசிக்க 
ஆக்சிஜன் கொடுத்த 
ஒரு மரத்தையாவது 
என் வாழ்நாளில் 
கண்டுபிடிக்க வேண்டும்.

Monday, August 30, 2021

ஆலமரத்திற்கும், 
அபார்ட்மெண்ட் 
தொட்டி செடிக்கும் 
தூது 
இந்த வண்ணத்துப்பூச்சி.

Sunday, August 29, 2021

மழையும் 
பெய்கிறது,
வெயிலும் 
இருக்கிறது
'அர்த்தநாரீஸ்வர நாள்'
சுதந்திரம் 
பற்றிய 
மரபுக் கவிதையில் 
கைதிகளாய்
'அணி'வகுத்து 
நின்றன
வார்த்தைகள்.

சூரிய கிரகணம்

காரணமாக 

எல்லா பெரிய கோயில்

நடையும் சாத்தப்படுகிறது;

முச்சந்தியில் சூரியனின் சுரீர்

ஒளி படுகிறது;

பிள்ளையார் 

கோபமாக பார்க்கிறார்;

நான் பார்த்தும் பார்க்காத மாதிரி

கடந்து செல்கிறேன்!

Sunday, August 22, 2021

ஆயிரங்கால் மண்டபத்தில் 
நின்று கொண்டிருக்கிறேன்;
இப்போது 
ஆயிரத்து இரண்டு 
கால்கள்.

Thursday, August 19, 2021

'காடு' 
குறைந்துக் கொண்டே 
வந்து 
'க' என்றானது.

Sunday, August 15, 2021

மழையைப் பார்க்கிறது;
மழையில் நனைகிறது;
ஆனால் 
உணர்வதே இல்லை 
'எருமை மாடு,
எருமை மாடு' .

Wednesday, August 11, 2021

முகநூல் நண்பரை 
நேரில் சந்தித்தேன்;
"லைக்" என்று 
சொல்லிவிட்டு 
போனார்.

Friday, August 06, 2021

வானொலியில் 
ஒலித்த அந்த பாடல் 
சுமாராகத்தான் 
இருந்தது;
ஆனால் 
அந்த பாடலை 
விரும்பிக்  கேட்ட 
நேயர்களின் 
ஊர் பெயர்கள் 
அவ்வளவு அழகு.

Thursday, August 05, 2021

பத்து வார்த்தை 
கோர்வையாக கொடுத்தால் 
என்ன 
குறைந்தா போய்விடுவாய் 
என்றேன்;
பதிலேதும் சொல்லாமல் 
எல்லா வார்த்தையையும் 
வைத்துக்கொண்டு 
அலமாரியில் அமர்ந்திருக்கிறது 
அகராதி.

Sunday, August 01, 2021

எதையாவது பிடித்துக்கொள்ளுங்கள் 
என்கிறார்கள்;
எதையும் பிடிக்கக்கூடாது 
என்பதை 
பிடித்துக் கொள்கிறேன்.
நான் சிக்னலில் 
நிற்பதா வேண்டாமா 
என்பதை 
எனக்கு பின்னால் 
வருபவனின் வேகம் 
தீர்மானிக்கிறது.

Friday, July 30, 2021

குறைந்தது 10 நபர்களுக்கு 
பார்வேர்ட் செய்யவேண்டும்;
இல்லையென்றால்
தினமும் 
உங்கள் கைபேசிக்கு  
ஒரு கவிதை 
அனுப்பி வைக்கப்படும்.

Thursday, July 29, 2021

வீட்டு மரக்கதவில் 
ஒரு பட்டாம்பூச்சி 
அமர்ந்திருந்ததைப் 
பார்த்தேன்;
கதவுக்கு முன் 
மரமாக இருந்தபோது 
என்ன கதையோ 
இவைகளுக்குள்
என்று,
பட்டாம்பூச்சி நகரும்வரை 
கதவை திறக்காமல்
அங்கேயே 
அமர்ந்திருக்கிறேன்.

Wednesday, July 28, 2021

மழைக் காலத்தில் 
எழுதப்படும் 
கவிதை, 
நதி.

இரவில்

குளத்தில் மிதக்கிறது, 

நிலா 

எடுத்துக்கொண்ட 

செல்பி.

Friday, July 23, 2021

ஆண்டு - 2500

ஏலியன்கள்,
மனிதர்களை 
மனிதனாகப் 
பார்க்காமல் 
ஸ்மார்ட் குரங்காகவே
பார்ப்பதை 
எதிர்த்து போராடவேண்டும் 
தோழர்களே.

Thursday, July 22, 2021

மரத்தின் 
நிழலில் நின்றேன்.
அந்த மரம் ஏன் 
நிற்கிறது என்று 
நான் 
கேட்கவேயில்லை.

Wednesday, July 21, 2021

மறுபிறப்பு பற்றிய 
திருக்குறள் படிக்கும்போது 
தோன்றுவது,
"நான் எத்தனை 
ஜென்மமாக 
இந்த குறளை 
படித்துக் கொண்டு
இருக்கிறேன்"
பழைய 
ஞாபகங்களை 
மறந்துவிட்டேன்.
இப்போது 
இந்த 
பாடல்களை 
மறக்கவேண்டும்.

Sunday, July 18, 2021

கோபுரத்தின் 
கண்ணாடி, 
கோவில் 
குளம்.

Saturday, July 17, 2021

வயதுக்கு 
வந்த 
தமிழ் 
வார்த்தை 
'காதல்' 

Wednesday, July 14, 2021

சரியாக 
பௌர்ணமிக்கு 
முந்தைய தினத்தில் 
'இன்று பௌர்ணமியா?'
என்று கேட்டால், 
நீங்களும் 
என் நண்பரே. 

Tuesday, July 13, 2021

இந்த உடலோடு 
எனக்கு 
ஒரு பிரச்சினை;
யாராவது 
என் பெயரை 
அழைத்தால், 
இது 
திரும்பிப் பார்க்கிறது. 
கடவுள் 
மனிதனுக்கு 
செய்யும் 
நீர் அபிஷேகம்,
மழை.
கனவில் தூங்கும் போது,
அது கனவு இல்லை;
அது நிஜம்.

Monday, July 12, 2021

கேள்விக்கு 
விடை,
சில நேரங்களில்
இன்னொரு 
கேள்வி.

Saturday, July 10, 2021

அவர்கள் 
இறந்து விடுகிறார்கள்;
அவர்களை நினைத்து 
நாம் தான் 
செத்துக் கொண்டிருக்கிறோம்.

Thursday, July 08, 2021

என் 
அனுமதி இல்லாமலே 
என் 
மடியில் அமர்ந்திருக்கிறது 
என் 
தொப்பை!
புத்தர் இப்போது 
பிறந்தால் 
சித்தார்த்தனாகவே
இருந்துவிடுவார்;
அனைத்து 
போதி மரமும் 
வெட்டப்பட்டுவிட்டது.

Wednesday, July 07, 2021

அடுத்த வருடம் முதல் 
வானவில் பார்த்தால்
18%  ஜிஎஸ்டி என்று 
அரசு அறிவித்ததும்,
பலபேர் முதல்முறையாக 
தேடித்தேடி  
வானவில் பார்க்கிறார்கள்.
வாயின் கட்டுப்பாடு அல்ல
மௌனம்;
காதின் கட்டுப்பாடு;

Monday, July 05, 2021

முதல்முறை
புத்தகத்தை 
முடிக்கவேண்டும் 
என்று படித்தேன்; 
மறுமுறை
அதே புத்தகத்தை
படித்து 
முடிக்கவேண்டும்.

Monday, June 28, 2021

ஒருவர் அவரை இறைத்தூதர்
என்கிறார்;
ஒருவர் இறைவனின் அவதாரம் 
என்கிறார்;
பலர் ஆராதனை எல்லாம் 
செய்கிறார்கள்;
ஆனால், 
ஒரு குழந்தை 
"bad touch" என்கிறது.

Friday, June 25, 2021

கோபத்தை 
கோபமாக மட்டும் 
வெளிக்காட்ட 
தெரிந்தவர்கள் 
முட்டாள்கள்.

Thursday, June 24, 2021

பள்ளிக்கூடம் முடித்து 
கல்லூரி சென்று 
பட்டம் வாங்கியபின்,
படிப்பு 
ஆரம்பமாகிறது.

Wednesday, June 23, 2021

 மூளை
தனக்குத்தானே 
பெயர் 
வைத்துக்கொண்டது
"மூளை"

Tuesday, June 22, 2021

காதல் என்கிற உணர்வை 
சொற்களுக்குள் அடக்கி 
கவிதை எழுதுவது 
என்பது,
'டைகர்' க்கும் &
'டைகர் பிஸ்கட்' க்கும் 
போடும் முடிச்சி.
சுதந்திரம் என்பது, 
நாக்கு சம்பந்தப்பட்டது அல்ல;
மூக்கு சம்பந்தப்பட்டது.
அதாவது பேசுவது அல்ல 
சுதந்திரம்;
"சுவாசிப்பது!"  

Monday, June 21, 2021

கைப்பேசியை  
என்ன செய்தும் 
பலனில்லை;
சார்ஜ்-ஜில்
போடுவதற்கு 
முன்பு வரை கூட 
நன்றாகத்தான் 
இருந்தது. 
யோசித்து பார்த்தால், 
இன்று காலை 
அது 
என் முகத்தில்தான் 
விழித்தது.

Sunday, June 20, 2021

எல்லோரும் கோலத்தின் அழகை 
இரசித்துக் கொண்டிருக்கையில்,
கோலத்தில் சிறைப்பட்டிருக்கும்
புள்ளிகள் 
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன!
அகத்தின் 
அழகு 
முகநூலில் 
தெரியாது!

Saturday, June 19, 2021

நதியின் தாகம் 
தீர்ந்துபோகிறது,
நிலவின் நிழல் 
நதியில் விழும்போது!

Friday, June 18, 2021

கணினிக்கு புரிந்தது 
புத்தர் 
அல்லது 
ஆதிசங்கரர்
மட்டும்தான்.
அதாவது 
பூஜ்யம் 
அல்லது 
ஒன்று :-)
நான் ரொம்ப பிஸி;
அப்படிதான் ஒருநாள் 
என் தாத்தாவின் 
கொள்ளு தாத்தாவிற்கு 
ஒரு பெயர் வைத்தேன்.
நானே ஒரு நாளை தேர்வுசெய்து 
அனைவருக்கும் கேக் கொடுத்து 
அவருக்கு பிறந்தநாள் 
கொண்டாடினேன்;
இப்போதுகூட அவருக்கு 
ஒரு தேதி முடிவுசெய்து 
திதி கொடுக்க ஒரு அய்யரை 
பார்க்க சென்றுக்கொண்டு இருக்கிறேன்.
நான் ரொம்ப பிஸி!

Thursday, June 17, 2021

இரயில் பயணத்தில் 
நம் கூடவே 
ஓடிவந்த மரங்கள் 
எப்போது 
அங்கேயே நிற்கிறதோ,
அப்போது நாம் 
ஓட ஆரம்பிக்கிறோம்.

Sunday, June 13, 2021

'சாமி பூ' என்று
அர்ச்சகர் என்னிடம் தர 
அம்மனிடம் கொடுங்கள் என்று 
அவளை நோக்கி 
கை காட்டினேன்.
என்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பார்த்துக் கொள்கிறேன்;
என்னை நம்பி இரு. 
இல்லையென்றால், மயிரே போனது 
என்று நான் திரும்பிகூட 
பார்க்காமல் சென்றுவிடுவேன் 
என்று கோவமாக சொல்லிவிட்டேன்.
(இன்று காலை எனக்கும் & என் தலைமுடிக்கும் 
நடந்த உரையாடல் இது)

Friday, June 11, 2021

எல்லா 'பாஸ்வேர்டு'-யும்
வைத்தாகிவிட்டது;
அடுத்த 'பாஸ்வேர்ட்'-க்கு 
அவசரமாக யாரையாவது 
காதலித்தாகவேண்டும்!
எனக்கு பிடித்தவை
இரண்டு.
ஒன்று இரண்டாவது.
இரண்டு ஒன்றாவது.

Wednesday, June 09, 2021

மல்லிகை பூவை பார்க்கும்போது
எனக்கு இரண்டு பிரச்சினைகள்:
அதற்கு அதன் பெயர்
'மல்லிகை' என்று தெரியாது.
இரண்டாவது அதன் வாசம்
கூட அதற்கு தெரியாது.