இரவில்
பெய்யும்
மழைக்கு
நான்
வைத்திருக்கும்
பெயர்
'இரழை'
நேராக
கடலில்
பெய்கிறது;
சோம்பேறி
மழை.
கூழாங்கல்
மலையில் தெரியும்
பாறையை
நதிக்கு
அறிமுகம் செய்து
வைத்தது;
அவரும் நம்ம
பங்காளி
வகையிரா தான்.
நான்
வாங்குவதில்லை,
சத்தமாக
விற்பவரிடம்
'பூ'
மிகப் பெரிய
சுடுகாடு
இந்த
பூமி.