எலி பந்தயத்தில்
இருந்து
வெளிவர
வழி சொல்கிறார்கள்;
எலி கூட்டத்தில்
இருந்து
எப்படி வெளிவருவது.
ஏரியில்
இருந்த
படகை
குடத்தில்
ஏற்றிக்கொண்டு
போனாள்.
'பிறை நிலா'
நான் அதிகம்
பூவின் நிழலை
விட்டுவிட்டு
பூவை மட்டும்
பறித்து செல்லுங்கள்.
தனியாக இருப்பது
ஒரு சுகம்தான்;
எங்கள் ஊர்
அரசமர
பிள்ளையார் போல.
என்
கருப்பு நிற காரை
துடைக்கும்
போதெல்லாம்,
என் தாத்தா வளர்த்த
'நாகு' எருமை
நியாபகத்திற்கு வருகிறது.
எல்லோரும்
ஒரு சொந்த
கதை
வைத்திருக்கிறார்கள்.
கவிதை
வைத்திருப்பவர்களுக்காக
காத்து இருக்கிறேன்.
பூமி தோன்றிய
காலத்தில் இருந்து
மனிதனை
கண்காணிக்கும்
cctv கேமரா
'சூரியன் & சந்திரன்'
பல வருடம்
கழித்து
சொந்த ஊருக்கு
போகிறேன்.
எல்லோரும்
என்னிடம் கேட்டதை
நான்
ஊரில் ஓடும்
ஆற்றிடம் கேட்டேன்,
'என்னங்க ...
இப்படி
இளைச்சிடீங்க'