Friday, February 12, 2010

கவிதை எழுதிவிட்டு தலைப்புக்கு
யோசித்து பார்த்தால் ஒன்றுமே
தோன்றவில்லை !!!!
சரி யாரிடமாவது கேட்போம் என்று
கவிதையை படிக்கச் சொல்லி கேட்டேன் !!!
"பைத்
தியகாரதனமா இருக்கு "
என்றார் ஒருவர்;
"கிறுக்கல் இது "
என்றார் இன்னொருவர்;
"தலைக்கு லெமன் போட்டு குளிச்சா சரியாகிடும் "
என்றார் நெருங்கிய நண்பர்.
மௌனமாக சிரித்துகொண்டே
தலைப்பு கிடைத்த சந்தோசத்தில் அவர்களை விட்டு நகர்ந்தேன் !!!
தலைப்பு : காதல்


1 Comments:

Blogger Mohan Kumar said...

நீங்கள் ஒரு காதல் கிறுக்கன்

Feb 12, 2010, 2:18:00 PM  

Post a Comment

<< Home